Breaking

Sunday, June 21, 2020

“நீதிமன்றில் தெரிவிக்க வேண்டியவைகளை ஊடகங்களில் மாத்திரம் பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பது ஏன்? “ - முன்னாள் அமைச்சர் ரிஷாட்!

தனது சகோதரர் ரியாஜ் பதியுதீன் தொடர்பில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர்நீதிமன்றுக்கு தெரிவிக்க வேண்டிய விடயங்களைஅங்கு தெரிவிப்பதை விடுத்துஊடகங்களில் மாத்திரம் பொய்யான தகவல்களை கூறிவருவதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

சகோதரர் ரியாஜின் கைது தொடர்பில், ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு நேற்று (20) பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“தற்கொலைதாரி இன்ஷாப் அஹமட், எனது சகோதரருக்கு கடந்த வருடம் ஆறு உள்வரும் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டிருக்கிறார். அந்த குற்றச்சாட்டின் பேரிலேயே எனது சகோதரர் கைது செய்யப்பட்டார். எனினும்குறிப்பிட்ட உள்வரும் தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பில் எனது சகோதரர் தெளிவாகசட்ட ரீதியாக நிரூபித்திருக்கிறார்.

எனினும்பொலிஸ் ஊடகப் பேச்சாளர்எனது சகோதரர் தொடர்பில் அப்பட்டமான பொய்களை ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார்.

பொலிஸ் ஊடகப்பேச்சாளரின் கூற்றுப்படிஎனது சகோதரர் பயங்கரவாத நடவடிக்கைக்கு வாகனம் வழங்கியிருந்தால்அதன் இலக்கம் மற்றும் அதுபற்றிய விபரங்களையும் தெரிவித்திருக்க வேண்டும். அத்துடன்பணம் வழங்கியிருந்தால் அது தொடர்பிலும் வெளிப்படுத்த வேண்டும். இதை விடுத்துவெறுமனே அரசியல்வாதி போன்றுஎழுந்தமானமாக இவர் பேசுவது வேதனையளிக்கின்றது.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், எனது சகோதரரை அடைத்து வைத்துக்கொண்டுநீதிமன்றுக்கு கூறும் விடயங்களை அங்கு தெரிவிக்காதுஇவ்வாறு ஊடகங்களிடம் அபாண்டங்களை கூறுகின்றார்.

எனது சகோதரரின் சட்டத்தரணிகளை பார்க்கவிடாமலும்வாரத்துக்கு ஒருமுறை குடும்ப உறுப்பினர் ஒருவரை மாத்திரம், பத்து நிமிடங்கள் அவரைப் பார்க்க அனுமதித்துவிட்டுபொய்யான செய்திகளை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வழங்குகின்றார். நீதிமன்றுக்கு சொல்லவேண்டிய விடயங்களை, ஊடகத்தில் மாத்திரம் பேசுவது தர்மமாகாது” என்றும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Pages