Breaking

Sunday, November 17, 2019

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் விடுத்துள்ள அறிவித்தல்!


ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் இன்று மாலை வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மாலை 4 மணிக்கு முன்னர் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
நாளையதினம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என ஏற்கனவே தலைவர் அறிவித்திருந்த நிலையில் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது.
இதேவேளை இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பிரடனம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Pages