Breaking

Saturday, November 16, 2019

முதல் தபால் மூல முடிவு நள்ளிரவுக்கு முதல்


2019 ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், மாலை 5.15 மணியளவில் தபால் மூல வாக்குகள் என்னும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் முதலாவதாக இரத்தினபுரி மாவட்ட தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளை அறிவிக்கவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்தார்.
தற்போது இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
மேலும் குறித்த முதல் தபால் மூல முடிவுகளை நள்ளிரவு 12 மணிக்குள் வெளியிட எதிர்பார்ப்பதாகவும் அதற்கு முன்னதாக 11 மணியளவில் வெளியாகவும் வாய்ப்புகள் இருக்கலாம் என்றும் அது தொடர்பில் நிச்சயித்து கூற முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

No comments:

Post a Comment

Pages