Breaking

Monday, May 18, 2020

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற 11ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் பிரபா கணேசன் பங்கேற்பு!


கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது, உயிரிழந்த எமது உறவுகளை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்காலில் இன்று இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.

உணர்வுபூர்வமாக இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் தமது உறவுகளை இழந்த மக்கள் கண்ணீர் மல்க மலர்தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

படையினரின் கெடுபிடிகளை கடந்து அதிகாரத்துக்கு உட்பட்டு நாட்டில் உள்ள தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு அவர் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினார்.

இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ள விடாமல் தடுத்த இராணுவம் மற்றும் பொலிஸாருடன் வாக்குவாதப்பட்டு மேல்மட்டம்  கொண்டு சென்று உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார்.

இதன்காரணமாக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உரிய நேரத்துக்கு செல்ல வேண்டிய விடயங்களை பற்றி தெளிவு படுத்திய நிலையில், தனது ஆதரவாளர்களுடன் சென்ற நான்கு வாகனங்களில் முன்னாள் பிரதி அமைச்சர் சென்ற வாகனத்தை மாத்திரமே அனுமதித்திருந்தனர்.

உண்மையில் எமது மக்களின் இந்த உரிமையைக் கூட போராடி பெறவேண்டி ஏற்பட்டமை குறித்து முன்னாள் பிரதி அமைச்சர் கவலை வெளியிட்டிருந்தார். (Selvi)

No comments:

Post a Comment

Pages