கண்டி எசல பெரஹரவின் ஆரம்ப நிகழ்வான கப் நடுகை செய்யும் பாரம்பரிய நிகழ்வு இன்று (02) அதிகாலை 05.10 மணியளவில் சுப நேரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு சுமார் 7000 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட 7000 பொலிஸாரே இவ்வாறு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
அவர்களுடன், இராணுவத்தினர் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
إرسال تعليق